திங்கள், 19 மார்ச், 2012

இந்தியாவின் அசத்தல் வெற்றி

நேற்று நடைபெற்ற (18-03-2012) ஞாயிற்றுக்கிழமை இந்திய பாகிஸ்தான் அனிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்கிய இந்திய அணி அசத்தல் வெற்றி ஒன்றை பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 329 ஓட்டங்களை பெற்றது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய முகமது ஹபீஸ் மற்றும் நஸீர் ஜாம்ஷெட் ஆகியோரின் துடுப்பாட்டம் மிக சிறப்பாக அமைந்தது. இருவரும் சேர்ந்து 196 பந்துதுகளில் 200 ஓட்டங்களை கடந்தனர். இவர்கள் இருவரின் விக்கெட்டுகளை கைப்பற்ற இந்திய பந்து வீச்சாளர்களால் முடியாமல் போனது. (இந்தியா சார்பாக இப்போட்டியில் 8 பேர் பந்துது வீசியமை குறிப்பிடத்தக்கது) முதலில் ஹபீஸ் சதம் அடித்தார் பிறது ஜாம்ஷெட் சதம் அடிடித்தார்.

பாகிஸ்தான் அணி 224 ரன்களை எடுத்திருந்தபோது 112 ரன்கள் எடுத்திருந்த ஜாம்ஷெட் அஸ்வின் பந்தில் பத்தானிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார் . அடுத்து 225 வது ரன்னில் முகமது ஹபீசும், அசோக் டிண்டாவின் பந்தில் LBW முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய யூனிஸ்கான், உமர் அக்மலுடன் சேர்ந்து  அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் பாகிஸ்தான் அணியின் ரன் எண்ணிக்கை உயர்ந்தது. 24 பந்துகளில் 28 ரன்களை அடித்த அக்மல், பிரவீன் குமாரின் பந்தில் காம்பீரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து யூனிஸ்கான் 34 பந்துகளில் 52 ஓட்டங்கள எடுத்த நிலைலயில் பிரவீன் குமாரின் பந்தில் சுரேஷ் ரெய்னாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். ஷாகித் அப்ரிடி 9 ஓட்டங்களிலும் , ஹமத் ஆஸம் 4 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து பாக். அணி 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 329 ஓட்டங்களை குவித்தது. மிஸ்பா உல் ஹக் 4 ரன்களுடனும், உமர்குல் ரன் எதுவும் எடுக்காமலும்  இருந்தனர்.

இந்திய அணி.....
 கோலி மீண்டும் ஒரு சதம்
 
 பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணி போட்டி தொடங்கிய இரண்டாவது பந்திலேயே கௌதம் கம்பீரை பறிகொடுத்தது. எனினும் சச்சின்  கோலி இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்காக 133 ஓட்டங்களை பகிர்ந்தனர். சச்சின் 52 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போதும், விராத் கோலி தனது 11 வது சதத்தை பூர்த்தி செய்தார். அவர் இறுதியாக விளையாடிய நான்கு ஒரு நாள் போட்டிகளில் மூன்றில் சதமடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. முதன் முறையாக 150 ரன்களை ஐ கடந்த கோலி மொத்தமாக 148 பந்துகளில் 22 பவுன்றிகள், 1 சிக்ஸர் அடங்களாக 183 ஓட்டங்களை எடுத்தார். 

விராத் கோலியுடன் ஜோடி சேர்த ரோஹித் ஷர்மா 68 ஓட்டங்களை எடுத்தார். போட்டி முடிவடைய இருந்த தருணம் இருவரும் ஆட்டமிழந்த போதும், சுரேஷ் ரைனா, தோனி ஆகியோர் களமிறங்கிய சில நிமிடங்களிலேயே ஆட்டத்தை முடித்தனர். கோலியின் அதிரடியால் 47.5 ஓவர்களில் வெற்றி இலக்கை இறுதியாக கடந்தது இந்தியா.  அதிரடியாக 183 ரன்களை குவித்த விராட் கோலி ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.   

இப்போட்டியில் பாகிஸ்தான் தோல்வியுற்ற போதும் போனஸ் புள்ளிகளை இழக்காததால், இறுதி போட்டிக்கு சென்றுள்ளது. இந்தியா - பங்களதேஷ் அணிகளில் எது இறுதி போட்டிக்கு செல்லும் என்பது இலங்கையுடன் பங்களாதேஷ் அணி விளையாடும் போட்டியின் வெற்றி பெறும் அணியின் சார்பில் தீர்மானிக்கப்படும்.

இவ்வெற்றியின் மூலம் இந்தியாவால் விரட்டி அடிக்கப்பட்ட மிகப்பெரிய இலக்கு இதுவாகும்.

மேலதிக விபரம்....... 
நன்றி

  • சில தகவல்கள் இணையதளங்களில் எடுக்கப்ட்டது

1 கருத்து:

  1. Hi, I have been visiting your blog. ¡Congratulations for your work, good luck with your blog! I invite you to visit my blog about literature, philosophy and films:

    http://vniversitas.over-blog.es
    http://carpe-diem-agc.blogspot.com/
    http://alvaro-alvarogomezcastro.blogspot.com/

    Greetings from Santa Marta, Colombia

    பதிலளிநீக்கு